தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர் என்றும். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதற்கும் உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மீனவர்கள் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தையும், பாஸ்போர்ட்டையும் ஈரான் நாட்டிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV