8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி, சேலத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து விவசாயிகள் வெளியேறினர்.<br /><br />சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது 8 வழி பசுமை அழிப்பு சாலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அனைத்து விவசாயிகளின் ஒருமித்த குரலாக ஒலித்தது. இந்த திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே உள்ள 4 வழிச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் ஆலோசனை வழங்கினர். இதனை தொர்ந்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. <br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV