ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் நல்ராஜ் என்பவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், சிறப்பு பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நாட்டு வெடிகுண்டுகளை மம்சாபுரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் 7 நாட்டு வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் போது திடீர் என நாட்டு வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 5 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடனர். மேலும் குண்டு வெடித்த மம்சாபுரம் காவல் நிலையத்தை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் பார்வையிட்டு விசாரனை நடத்தினார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV