காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். <br /><br />கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் உச்சநீதிமன்றம்/நடுவர் மன்றம் என எந்தவிதமான சட்ட அமைப்பின் உத்தரவையும் மதிப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், இத்தகைய அரசு பதவியில் நீடிக்க எந்த தகுதியுமில்லை என சாடியுள்ளார். <br /><br />மேலும், ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். <br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV