கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், தம்பதியினரை படம் எடுத்து அத்துமீறலில் ஈடுபட்ட புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.<br />கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகள், தம்பதியினரை படம் எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புதுச்சேரி காவலர் ராஜ்குமாருக்கு எதிராக 2 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வழக்கு விசாரணையை காவல்துறைக்கு பதிலாக வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றக்கோரியும் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், வேலியே பயிரை மேய்வதாக உள்ள ராஜ்குமாரின் செயலை அனுமதிக்க முடியாது என தனது கண்டனத்தை தெரிவித்தார். <br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV