தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 85 டேங்கர் லாரிகள் மூலம் 1500 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியேற்றப்படுள்ளது என்றும், இன்று இரவுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.<br /><br />இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 18ம் தேதி தொடங்கி 7 வது நாளாக கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடர்கிறது என்றும், இதுவரை 85 டேங்கர் லாரிகள் மூலம் 1500 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இந்த பணிகள் இன்று இரவுக்குள் நிறைவு பெறும் எனவும் தெரிவித்தார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV