ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான இவர் நேற்று தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர். போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டியதில் பல்வேறு வகையான பழைய தோட்டாக்கள் கிடைத்தது. <br />8 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 உயர்தர மெஷின்கள், இரண்டு சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள், 5 கையெறி குண்டுகள், 5 கன்னிவெடிகள் தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுத குவியல்,15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளதாகவும், பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.<br /><br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV