Surprise Me!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி 4-ஆம் கட்டமாக புழல் சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை

2018-07-17 2 Dailymotion

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறைச் சாலைகளில் 10 ஆண்டு சிறை தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை படிப்படியாக விடுதலை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. முதல்கட்டமாக புழல் சிறையில் இருந்து கடந்த 6-ந் தேதி 67 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 52 கைதிகளும், 20-ம் தேதி 47 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், 4-ம் கட்டமாக இன்று புழல் சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். <br /><br /><br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon