தூத்துக்குடியில் மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்தது. தொடர்ந்து விசாரணை ஆணையத்திடம் பொதுமக்கள் தங்கள் தகவல்களை பிரமாண பத்திரமாக வழங்க ஜூன் 22ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது அவகாசத்தை ஜூலை மாதம் 27ம் தேதி வரை நீட்டித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV