சோழிங்கநல்லூர் தொகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு பெரிய தொகுதியாக உள்ளது என்றும், இந்த பகுதியில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் என்றும் இதற்கான பணிகள் எப்போது முடிவடையும் என திமுக உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கரணை பகுதியில் 58கோடி கோடியே 53லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், 690 பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV