Surprise Me!

மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருகிறது - தேசிய வானிலை மையம்

2018-07-17 2 Dailymotion

தென் மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 29ம் தேதி தொடங்கியது. அந்தமான் பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் கடந்த மே மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கியது. அதனை தொடர்ந்து மே 29ம் தேதி வழக்கத்தை விட கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்தது. தொடங்கிய சில நாட்களில், கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் கனமழையை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் உதகை,கோவை,தேனி,கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. இதனிடையே கடந்த 10 நாட்களாக பருவமழையின் தாக்கம் தொய்வடைந்து காணப்பட்ட நிலையில், வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கதேச கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் வலுப்பெற தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் பருவகாற்றின் தாக்கத்தால் பல்வேறு மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon