இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும், இதில் 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை கடத்தல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த விகிதம் 22.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றும், கடந்த 2015-ம் ஆண்டில் 41 ஆயிரத்து 893 குழந்தைகளும், 2014-ம் ஆண்டில் 37 ஆயிரத்து 854 குழந்தைகளும் கடத்தப்பட்டு இருந்தனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் குழந்தை கடத்தல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என தெரியவந்துள்ளது<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV