இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் நாளை வீரன் அழகுமுத்துக்கோன் 308வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது என்றும். இந்த விழாவானது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் ஜூலை 11-ம் தேதியான, நாளை காலை 5 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த 144 தடை உத்தரவு ஜூலை 12-ம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அவர் அறிவித்தார்<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV