தெலுங்கானா மாநிலம் ஐதரபாத் ஜெகத்கிரி குட்டாவை சேர்ந்த சிவாகவுட் என்பவர் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, தன்னை கைது செய்தால் தனது 2 வயது குழந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதே நேரத்தில் போலீசார் முன்னிலையில் குழந்தையை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வீசினான். தனது குழந்தை என்றும் பாராமல், குழந்தையை தரையில் போட்டு அடித்துள்ளான். இதனையடுத்து குழந்தையை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV