முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நாட்டுக்கு ஆற்றிய பணியை மறக்க முடியாது என்று கூறினார். <br /> <br />கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. <br /> <br />Former Prime Minister Devegowda visits Kauvery Hospital and he says that Can not forget Karunanidhi’s services. <br />