டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கத்தியால் ஒரு நபர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தற்போது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் தங்கி உள்ளார். <br /> <br />இன்று காலை 10 மணிக்கு அங்கிருந்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக கிளம்பினார். அவரிடம் பேட்டி கேட்பதற்காக பத்திரிகையாளர்கள் அவரது அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். <br /> <br />
