ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ், வேன் திருப்பரங்குன்றம் அருகே நேருக்கு நேர் மோதிகொண்டதில் 4 பேர் படுகாயம்<br /><br /> <br /><br />மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மூலக்கரை என்றஇடத்தில் ஐயப்ப பகத்தர்களை ஏத்தி வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேனும்,ஆந்திர மாநிலம் குடியாத்தம் பகுதியை பஸ் -ம் நேர்க்கு நேர் மோதி கொண்டதில் 4பேர்களுக்கு படுகாயம் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்.வேனை ஓட்டி வந்த பாலமுருகன் என்பவருக்கு காலில் பலத்த காயம்ஏற்பட்டுள்ளது. மற்றும் வேனில் பயணம் செய்த தங்கதுரை, நடராஜன், செல்வம்<br /><br />ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.பஸ்ஸில் வந்தவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் காயம் பட்டோருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்<br /><br />DES: Bus van face 4 injured