<br />தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் <br />நடந்து வந்த நிலையில், <br />வெள்ளியன்று <br />பிளஸ் 2 வேதியியல் கேள்வித்தாள் <br />சமூக வலைதளங்களில் வலம் வந்தது.<br /><br />சனியன்று நடந்த வேதியியல் தேர்வுக்கு<br />லீக்கான அதே கேள்வித்தாள் வழங்கப்பட்டது. <br />மாணவர்கள் ஈசியாக பரீட்சை எழுதினர்.<br /><br />அரையாண்டுத்தேர்வுகள் துவங்குவதற்கு <br />முந்தைய நாள் சிவகங்கை மாவட்டத்தில்<br />ஒரு பள்ளியில் பாதுகாப்பு பெட்டகத்தை<br />உடைத்து கேள்வித்தாள்கள் திருடப்பட்டன.<br /><br />இவ்விரு சம்பவங்களும் தமிழக பள்ளிகளில்<br />தேர்வுகள் ஒப்புக்கு நடத்தப்படுகிறதோ<br />என்ற தோற்றத்தை அளித்துள்ளது.<br /><br />கேள்வித்தாள்கள் லீக் ஆவதை தவிர்க்கும் வகையில், <br />இனி ஆன்லைனில் கேள்வித்தாள்களை<br />பள்ளிகளுக்கு அனுப்ப கல்வித்துறை<br />முடிவெடுத்துள்ளது. <br />