ரசு ஊழியர்னா <br />அவங்க ரேஞ்சே வேற.<br /><br />மினிஸ்டர், எம் எல் ஏ ன்னு யார்கூட சண்ட வந்தாலும்<br />அரசு ஊழியர்கள் அசர மாட்டாங்க.<br /><br />“அவங்கல்லாம் ஆஃப்டரால் அஞ்சு வருசம்<br />பதவில இருப்பாங்க;<br />நாங்கதான் நிரந்தரம்”னு சொல்லுவாங்க.<br /><br />அது ரொம்ப கரெக்ட்னு இந்த சம்பவத்துல<br />கன்ஃபர்ம் ஆயிருக்கு.<br /><br />நாட்டுக்கே பிரதமரா இருந்தாலும்<br />அரசு ஊழியர ஜஸ்ட் லைக் தட் பதவில இருந்து<br />தூக்க அதிகாரம் கிடையாதுன்னு<br />சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு.<br /><br />மத்திய புலனாய்வு அமைப்புன்னு சொல்ற<br />C B I ல டைரக்டரா இருந்தவர் அலோக் வர்மா.<br />அதே சி பி ஐ ல அவரோட அசிஸ்டென்டா இருந்தவர்<br />டெபுடி டைரக்டர் ராகேஷ் அஸ்தானா.<br /><br />ரெண்டு பேருக்கும் ஒத்து போகல.<br />அவர் மேல இவரும் இவர் மேல அவரும்<br />மாத்தி மாத்தி ஊழல் புகார் சொன்னதோட<br />திடீர் ரெய்டு, டி எஸ் பி அரெஸ்ட் அப்படீனு<br />ஓப்பனா மோதிகிட்டாங்க.<br /><br />அக்டோபர் 23 ஆம் தேதி ராத்திரில<br />மோடி அரசு அதிரடி ஆக்சன் எடுத்துது.<br />டைரக்டரையும் டெபுடி டைரக்டரையும்<br />கம்பல்சரி லீவுல அனுப்பிட்டு<br />நாகேஸ்வர ராவ்னு ஒருத்தர <br />இடைக்கால டைரக்டரா நியமிச்சுது.<br /><br />பிரதமர் சொல்லி <br />உள்துறை அமைச்சர் ஆர்டர் போட்டார்.<br /><br />டைரக்டர் அலோக் வர்மா அத எதிர்த்து<br />சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார்.<br />கோர்ட் இப்ப தீர்ப்பு சொல்லிருக்கு.<br /><br />”சி பி ஐ டைரக்டர நியமிக்கிறது,<br />பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், இந்திய தலைமை நீதிபதி<br />இந்த 3 பேரும் அடங்கின உயர்மட்ட குழு.<br />அதனால அவர நீக்குற பவர் <br />அந்த குழுவுக்குதான் இருக்கு. <br />அதோட கவனத்துக்கே வராம<br />டைரக்டர பதவில இருந்து தூக்குனது செல்லாது”னு<br />நீதிபதிகள் சொல்லிட்டாங்க.<br /><br />அலோக் வர்மா பதவி காலம் ஜனவரி 31 ல முடியுது.<br />கொஞ்சநாள்தான் பதவில இருப்பார்.<br />ஆனா, ஒரு காட்டு காட்டிட்டோம்னு<br />திருப்தியா ரிடயர் ஆவார்ல.<br /><br />இல்லாமலா பின்ன வடிவேலு<br />அந்த அலப்பற பண்ணாரு<br />அரசாங்க வேல கெடச்சிருச்சுன்னு..<br /><br /><br /><br /> <br />
