Homegrown என்ற ஆன்லைன் மீடியா கம்பெனியின்<br />இணை நிறுவனர் வருண் பத்ரா என்பவர்<br />புதிய சுழலில் சிக்கியுள்ளார்.<br /><br />இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை<br />பாசாங்கு எதுவும் இல்லாமல் பிரதிபலிக்கும் ஒரே மேடை<br />என்று விளம்பரப்படுத்தியதன் மூலம்<br />Homegrown ஆதரவாளர்களில் இளம் பெண்கள்<br />எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.<br /><br />வருண் பத்ராவுக்கு இது வசதியாகி விட்டது.<br />தினமும் ஒருத்தி என்கிற ரேஞ்சில் உல்லாசம் அனுபவித்தார்.<br />மீ டூ சூறாவளி தொடங்கியதும்<br />பெரிய தலைகள் எல்லாம் அசிங்கப்பட்டு உருள்வதை கண்டு<br />வருண் மிரண்டு போனார்.<br /><br />பரஸ்பர சம்மதத்துடன் செக்ஸ் வைத்து கொள்வது<br />சட்டப்படி தண்டிக்க கூடிய குற்றம் அல்ல என்று<br />சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அவருக்கு பயம்.<br /><br />இப்போது சம்மதிப்பவள் பிறகு மனம் மாறிவிட்டால்<br />மரியாதை நாறிவிடுமே என்ற பீதி விலகவில்லை.<br />அதற்காக செக்சை விடவும் மனம் இல்லை.<br />யோசித்து யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்.<br /><br />சம்மதம் சொல்வதில் தொடங்கி <br />செக்சின்போது சொல்லும் வார்த்தைகளையும்<br />முக்கல் முனகல் ஒலிகளையும் செல்போனில் பதிவு செய்தார்.<br />ஒருவேளை அந்த பெண் என்றைக்காவது எதிராக திரும்பி<br />மீ டூ அணிவகுப்பில் இழுத்து விட்டால்<br />சம்மதம் வாங்கியதற்கான ஆதாரமாக<br />ஆடியோ பதிவை வெளியிடலாம் என்பது<br />வருண் தலைக்குள் உதித்த ஐடியா.<br /><br />செல்போனை எடுத்து ஆடியோவை ஆஃப் செய்வதை<br />ஒரு பெண் கவனித்து விட்டாள்.<br />என்ன என்று கேட்டபோது <br />எதையும் மறைக்காமல் சொல்லியும் விட்டார்.<br /><br />அரண்டுபோன அந்த பெண் அதை அப்படியே<br />இன்ஸ்டாக்ராமில் விவரித்து அம்பலப்படுத்திவிட்டாள்.<br /><br />வருண் செய்தது சரியா தப்பா என்று<br />சோஷல் மீடியாவில் பட்டிமன்றம் ஓடுகிறது. <br />
