ஏ டி எம் மில் ஏமாற்றிய ஆசாமியை<br />17 நாட்கள் காத்திருந்து பிடித்திருக்கிறார் ஒரு மும்பய் பெண்.<br />ரெஹானா ஷேக் என்ற பெண்<br />பாந்த்ராவில் உள்ள ஏ டி எம் மில் <br />பணம் எடுக்க சென்றார்.<br />ஏதோ காரணத்தால் பணம் வரவில்லை.<br />வெளியே நின்ற ஆசாமி உதவிக்கு வந்தான்.<br />என்னென்னவோ செய்தும் பணம் வரவில்லை.<br />ரெஹானாவும் கிளம்பி விட்டார்.<br />வீட்டுக்கு போனதும் மெசேஜ் வந்தது,<br />உங்கள் கணக்கில் பத்தாயிரம் எடுத்திருக்கிறீர்கள் என்று.<br /><br />பேங்கில் புகார் செய்தார். போலீசுக்கு போனார்.<br />எதுவும் பலன் இல்லை. உன் அஜாக்ரதை என்று கேலி செய்தனர்.<br />ரெஹானா பார்த்தார்.<br />யாரையும் நம்பி பிரயோசனம் இல்லைனு முடிவு கட்டி<br />டெய்லி அந்த ஏ டி எம் முக்கு போய் நிக்க ஆரமிச்சார்.<br />மணிக்கணக்குல காத்திருப்பார், ஆசாமி வரானான்னு பாக்க.<br /><br />ஒருவழியா 18 நாலைக்கு அப்றம் வந்தான்.<br />ரஹானா பிடியில் சிக்கினான்.<br />விசாரிச்சப்ப தெரிஞ்சுது, இதே மாதிரி<br />மும்பைல மட்டும் 17 ஏ டி எம் ல அவன்<br />ஆட்டய போட்ருக்காங்றது.<br /><br />சென்னை போலீஸ் எவ்ளவோ பரவால்ல. <br /><br /><br />