கரூர் குளித்தலை அருகே மண்ணுளிப்பாம்பு தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த நிதிஷ் என்பவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்ட குளித்தலையை சேர்ந்த ராஜா என்பவர் ஏமாற்றியுள்ளார். இதனால் ராஜாவை பார்க்க கேரளவில் இருந்து நிதீஷ், முகம்மது ரபீக், நிதின், சுபாஷ் ஆகிய நான்கு பேர்கள் குளித்தலை வந்துள்ளனர். இந்நிலையில் ராஜாவின் நண்பர்களான தங்கவேல், மற்றும் கஞ்சநாயக்கர் என்பவரிடம் போனில் பேசி மண்ணுளிப் பாம்பை கேட்டுள்ளனர். அவர்களும் பாம்பை காட்டியுள்ளனர். இதையடுத்து பணம் 10 லட்சம் ராஜாவிடம் ஏற்கனவே கொடுத்து விட்டோம் என மண்ணுளிப்பாம்பை கொடுங்கள் என கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பிரனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கேரளாவை சேர்ந்த முகமது ரபிக் என்பர் துப்பாக்கியில் சுட்டதால் தங்கவேல் என்பவர் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.<br />இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த நிதிஷ், முகமது ரபீக், நிதீன், சுபாஷ் ஆகிய நான்கு பேர்களை குளித்தலை போலீசார் கைது செய்துள்ளனர்..மேலும் இவர்களிடம் இருந்த கை துப்பாக்கி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனார். <br /><br />Clash because of snake in karur.
