கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு<br />ஒற்றை தலைமை தேவை என்று எம்எல்ஏக்கள்<br />சிலர் கூறிய கருத்தால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டது. <br /><br />இதையடுத்து மீடியாக்களில் அதிமுக செய்தி<br />தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது<br />என கட்சி தலைமை உத்தரவிட்டது. <br /><br />மறு அறிவிப்பு வரும்வரை <br />யாரும் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது. <br />மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என<br />எச்சரிக்கை விடுக்கப்பட்டது. <br /><br />இந்நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் <br />இந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். <br /><br />ஜூலை 1ம் தேதி முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் <br />தங்கள் பணியை தொடரலாம் என அறிவித்துள்ளனர். <br />