பாகிஸ்தானுக்கு தண்ணீர் கட்.. இந்தியா அதிரடி அறிவிப்பு..!<br /><br />காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது. <br /><br />இந்நிலையில், இமயமலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.<br /><br />இது குறித்து பேசிய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. <br /><br />மேலும், அந்நாட்டுக்கு பாயும் நதிகளை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.<br /><br />மாநிலங்கள் இடையில் இருக்கும் தண்ணீர் பிரச்சனை போதாதென்று, இப்போ இதுவேற.. பொருளாதாரம் நடு ஆற்றில் இருக்கும்போது இதெல்லாம் அவசியமா..?<br /><br />