விஜய்க்கு ஒரு பெரும் மாஸ் ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரின் மனதிலும் இருக்கிறது. அதே வேளையில் அவரின் பெயரை கொண்டு சமூகவலைதளங்களில் சிலர் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிப்பை காட்டுகிறது.<br /><br />அண்மையில் அவர் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பலருக்கும் நினைவிருக்கும் தானே. இப்போது வரை அது அரசியல் சர்ச்சையாக ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையான திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கருத்தை வெளிப்படுத்தினார்.<br /><br />நேற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமூர்த்தி கண்ணான கண்ணே பாடலை பாடியது பலரையும் ஈர்த்தது. வீடியோவும் வைரலானது.<br /><br />அவரின் செல்போன் நம்பரை கேட்டு வாங்கி அழைத்து பேசி விஸ்வாசம் பாடலாசிரியர் இமான் வாய்ப்பு வழங்குவதாக கூறியிருந்தார்.<br /><br />இதை குறிக்கும் விதமாக விஜய் பிகில் மேடையில் பேசியதை கொண்டு மீம் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். இது தற்போது வைரலாகிவருகிறது.<br /><br /><br /><br />கிருஷ்ணகிரி மாவட்டம். #நொச்சிப்பட்டி எனும்<br />ஓர் அழகிய கிராமத்தில் பிறந்தவர்<br />செல்வன்.தி#திருமூர்த்தி அவர்களின்<br />#கண்ணாண_கண்ணே (விஸ்வாசம் படத்தில்) தற்பொழுது உங்களுக்காக ரிக்கார்டிங் செய்யப்பட்டது.<br /><br />இவரின் குரலாலும்/பாடலாலும் அந்த<br />ஊரையே இவர் வசம் வைய்த்துள்ளார்.<br /><br />(பார்வையற்றவர்/சிறும் வயதிலே தாயை இழந்துவர்)<br />ஆனாலும் என்றும் தன்தாய் நினைப்பில்<br />இன்னும் இதுபோன்ற பாடல்களை பாடிக்கொண்டே<br />தான் இருக்கிறார்.<br /><br />இந்த பார்வையற்ற இசைப்பிரியனையும்<br />கலைஞனையும் மனதார பாராட்டி<br />இந்த பாடலை சேர் செய்வோமே??.....