<br />விண்ணின் மேன்மை துறந்து<br />மண்ணிற்கு வந்த மகிபனே<br />பாவத்தை பரிகசிக்க வந்த உன்னை<br />பாழான லோகம் பரிகாசம் செய்தது<br />ஆரவாரத்தோடு வரவேற்க வேண்டிய அரசனை<br />ஆணிகள் அடித்து துன்புறுத்தியது<br />சிரம் தாழ்த்தி வணங்க வேண்டிய உன்னை<br />சிலுவையை தூக்கி சுமக்க வைத்தது<br />பாவியை பரமனிடம் சேர்க்க<br />பலியாக்கினீர் உம்மை பரிகாரியாக<br />சீக்கிரம் வரப்போகும் உம்மை சந்திக்க<br />சிலுவையோடு காத்திருக்கிறேன்<br />உம் சீஷனாக