Surprise Me!

லாக்டவுன் இல்லா ஞாயிற்று கிழமை.. காசிமேட்டில் களை கட்டிய மீன் வியாபாரம் - வீடியோ

2020-09-06 1 Dailymotion

சென்னை காசிமேட்டில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்டிருந்ததாலும், அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு இருந்ததால் காசிமேடு மீன்சந்தை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. <br /><br />இதனால் வழக்கமாக சந்தை போடும் பகுதியில் இல்லாமல் சாலை ஓரங்களில் வியாபாரிகள் மட்டும் மீன்வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளிலே மீன் வாங்க பொதுமக்கள் அலைமோதிய நிலையே இருந்து வந்தது. <br /><br />இந்நிலையில் இந்த ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு இல்லை என அரசு தளர்வுகள் அளித்த நிலையில் முழு ஊரடங்கு இல்லாத ஞாயிற்றுகிழமை என்பதால் காசிமேட்டில் மீன்சந்தை 5 மாத இடைவெளிக்கு பின் திறக்கப்பட்டது. இதனால் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் காசிமேடு மீன்சந்தைக்கு படையெடுத்தனர். <br /><br />கொரோனா பரவல் இருந்தபோதும் காசிமேடு மீன்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்ததால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.<br /><br />People crowded fish Shops ahead Sunday Unlock<br />

Buy Now on CodeCanyon