பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பயிர் செய்து, விதைநெல்லைப் பரவலாக்குவதைச் சிலர் செய்துவருகிறார்கள். போற்றுதலுக்குரிய அந்தப் பணிக்காக, தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் 111 விதமான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அசத்திவருகிறார் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், மேல காசாகுடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர். அணிவகுக்கும் பாரம்பர்ய நெற்பயிர்களைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.<br /><br />Reporter - K.Ramakrishnan<br />Video - B.Parasanna Venkatesh<br />Organizing AnD Editing - Durai.Nagarajan