Surprise Me!

குழந்தையைத் தத்துகொடுத்தால் வறுமை நீங்கும அதிசயம் - வையாபுரி மலைத் தல மகிமைகள்

2020-10-09 0 Dailymotion

குடும்பத்தில் வறுமை தாண்டமாடுகிறாதா? மருத்துவரால் கைவிடப்பட்டு பிணியால் அல்லல்படுகிறார்களா குழந்தைகள்? துன்பம் விலக தம் குழந்தைகளை முருகப் பெருமானிடம் தத்துகொடுக்கிறார்கள், மக்கள். முருகப் பெருமானும் அந்தக் குழந்தைகளைத் தம் குழந்தைகளாகவே பாவித்து பேரருள்புரிகிறார். இந்த அற்புத சடங்கு நடைபெறும் தலம், வையாபுரி சுப்பிரமணியர் கோயில். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயிருக்கிறது பாலகிரி என்றழைக்கப்படும் வையாபுரி கிராமம். பழநி மலைக்கு நிகரான புண்ணிய தலம் என்று போற்றப்படுகிறது இந்தத் தலம். பழநியில் ஆண்டிக்கோலத்தில் காட்சியளிக்கும் முருகப்பெருமான் இங்கு வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராகக் காட்சிதந்து அருள்கிறார்.<br /><br />சி.வெற்றிவேல். மணிமாறன்.இரா<br />வீடியோ : ஆர்.வெங்கடேஷ்.<br />குரல் : சௌந்தர்யா

Buy Now on CodeCanyon