''இது வளர்ச்சித் திட்டம்தானே... ஏன் எப்போதும் வளர்ச்சியை எதிர்க்கிறீர்கள்... உங்களுக்கு தமிழக எதிர்காலத்தின் மீது அக்கறையே இல்லையா?''<br /><br />''உங்களைவிட எங்களுக்குத் தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அதிக அக்கறை இருக்கிறது. அதற்காக நாங்கள் போராடிக்கொண்டிக்கிறோம். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்... புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்று இரண்டு வகை இருக்கிறது. நிலத்துக்கு அடியில் இருப்பது புதுப்பிக்க இயலாத ஆற்றல். இந்த ஆற்றல், உங்களுக்கு அதிக லாபம் தரும்; பொருளாதாரம் உயரும். மறுப்பதற்கில்லை. ஆனால், இதுவெல்லாம் குறுகிய காலம்தான். உங்களுடைய பகாசுர குழாய்கள் பூமிக்குள் 10,000 அடிச் சென்று அனைத்தையும் உறிஞ்சும்போது, அதிகமாக நுகரும்போது, அந்தப் புதுப்பிக்க இயலாத ஆற்றல் தீர்ந்துவிடும். அது தீர்ந்தால், நிலத்துக்கு மேல் எதுவும் வளராது.<br /><br />அதாவது, புதுப்பிக்கக்கூடிய ஆற்றலையும் சீரழித்துவிடும். இங்கு, மண் வளமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இந்தப் பூமிக்கடியில் இருக்கும் வளங்கள்தான். நீங்கள் குழாய் போட்டு எல்லாவற்றையும் உறிஞ்சி, வளரும் ஒரு குறுகியகால வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் நிலத்துக்கு மேல் வளரும் வளம் குன்றா வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறோம்.<br /><br />இப்போது சொல்லுங்கள்... எல்லாருக்குமான நீடித்த வளர்ச்சியைப் பற்றிப் பேசும் நாங்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்களா... இல்லை குறுகியகால வளர்ச்சியைப் பற்றிப் பேசும் நீங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களா...?''
