‘‘நம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்றைக்கு முதல்வர் சீட்டில் உட்கார்கிறோமோ, அன்றைக்குதான் இந்தக் கட்சியும் ஆட்சியும் நம்முடையது என்று முழுமையாக நம்ப முடியும். அதுவரை எது வேண்டுமானாலும் நடக்கும். கவனமாக இரு” என்று சசிகலா எச்சரித்ததாகச் சொல்கிறார்கள். <br /><br />‘‘தேவையில்லாமல் என்னை யாரும் பார்க்க வர வேண்டாம். எங்களைப் பார்த்துக்கொள்ள வக்கீல் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் இங்கேயே தங்கி இருக்கிறார்கள். அது தவிர கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி இருக்கிறார்” என்றும் சொல்லி இருக்கிறார் சசிகலா. <br /><br />தினகரன் வாங்கிவந்த பழங்கள், எனர்ஜி ஃபுட்ஸ் போன்றவற்றை இளவரசியிடம் கொடுத்தபோது, அவர் சலித்துக்கொண்டாராம். ‘‘தேவையில்லாமல் எதற்காக இதையெல்லாம் வாங்கி வருகிறீர்கள். மூன்று நாட்களுக்கு முன்பு வாங்கி வந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. அதையெல்லாம் மற்ற கைதிகளுக்கு கொடுக்கச் சொல்லி பாதுகாவலர்களிடம்தான் கொடுக்கிறோம்’’ என்றாராம் அவர்.
