ஏதோ நடந்துடுச்சு. நீயும் புகார் கொடுத்துட்ட... வா, நாம பேசி தவறுகளைச் சரிபண்ணிப்போம். சேர்ந்து வாழுவோம். அதை விட்டுட்டு மாறி மாறிப் பேசிட்டே இருந்தா ரெண்டு குடும்பங்களுக்கும்தான் அசிங்கம். நம்மளை நாமளே ஏன் அசிங்கப்படுத்திக்கணும்?’னு எவ்வளவோ சொன்னேன். என்ன... இந்தப் பிரச்னையில் என் குழந்தை பாதிக்கப்படுறாளேனு நினைச்சாதான் வருத்தமா இருக்கு. நான் கடவுளை நம்புறேன். ‘அவர் எங்களைக் காப்பாத்துவார்; சேர்த்துவைப்பார்’ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு’’ என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறார் பாலாஜி.
