அதிகாலை நான்கு மணி. முகாம் எப்போதும் போல அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது. முகாமிற்குள் புகுந்த யானை நேராகக் கும்கி யானைகள் இருக்கிற இடத்திற்கு வருகிறது. காட்டு யானையின் சத்தத்தில் சுஜய்யும் பாரியும் சுதாரித்துக் கொள்கின்றன. முகாமிற்குள் புகுந்திருப்பது மதம் பிடித்த யானை என்பதால் என்ன நடக்குமென்பதை யூகிக்க முடியாமல் போகிறது. <br /><br /><br /><br /><br /><br /><br />making of kumki elephant series