Reporter - கு.ஆனந்தராஜ்<br /><br />"ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் கனவு என் 13 வயதில் ஏற்பட்டது. 23 வயதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆகிவிட்டேன். இந்த ஆண்டுடன் என் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். நான் என்ன இலக்குடன் இந்தப் பணிக்கு வந்தேனோ, அதைக் கடந்த 25 ஆண்டுகளில் செய்திருக்கிறேன். ஒரு விஷயம் சரியானதாக இருந்தால், அதை தைரியமாகச் செய்ய வேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. இப்படித்தான் நான் சிறுவயதிலிருந்து வளர்ந்தேன்" என்று விகடன் விருது நிகழ்ச்சி ஒன்றில் அமுதா ஐ.ஏ.எஸ் கூற, அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.
