Surprise Me!

நாங்க நடந்துகூட போய்க்கிறோம் அனுமதிச் சீட்டு மட்டும் குடுங்க..! People suffers due to #lockdown

2020-11-06 0 Dailymotion

போர்வை, மெத்தை விரிப்பு, பாய் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக வந்து, கொரோனா ஊரடங்கில் சிக்கிக்கொண்ட வடமாநிலத் தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்ல அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.<br /><br />கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதிவரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், மே 4-ம் தேதியிலிருந்து ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்திலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்வை, மெத்தை விரிப்பு, பாய் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்காக விழுப்புரம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கால் உணவுக்கு வழியில்லாததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். <br /><br />CREDITS - ஜெ.முருகன் | தே.சிலம்பரசன்<br /><br />#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Buy Now on CodeCanyon