Surprise Me!

தினமும் தேடிவரும் 4 மலை அணில்கள்... நீலகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்! #petlover

2020-11-06 4 Dailymotion

MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI- http://www.mcon.ac.in/<br />Reporter - சதீஸ் ராமசாமி<br />Camera - கே.அருண்<br />குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி இரண்டு ஆண்டுகளாக ஒரு மலை அணில் நாள் தவறாமல் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று அணில்கள் வந்து பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.<br />கடந்த இரண்டு ஆண்டுகளாக நாள் தவறாது தேடி வரும் (Malabar gaint squirrel) மலை அணிலால் உள்ளூர் மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் நன்கு பரிச்சயமானவர் பழ வியாபாரி நசீமா.<br />நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலையோரத்தில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி மலை அணில் ஒன்று நாள்தோறும் வந்து பழங்களை வாங்கிச் சுவைத்துச் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு அணில் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 4 அணில்கள் அவர் தரும் பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.<br /><br />வறுமையை எதிர்கொள்ள பூங்கா வாசலில் சிறிய அளவிலான கடையை நடத்திவந்தாலும், எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ பழங்களை அணில்களுக்கு வழங்கி வரும் இவரது விலங்கு நேசம் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

Buy Now on CodeCanyon