தூத்துக்குடி மாவட்டம் மேலத் திருச்செந்தூர் அருகிலுள்ள காந்திபுரத்தில் உள்ளது மருத்துவர் சிவகுமாரின் தோட்டம். காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார். ‘‘தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிதான் என்னோட சொந்த ஊரு. தாத்தா, அப்பா, நான், என் மகன் என 4 தலைமுறையா மருத்துவர் தொழில் பார்த்துட்டு இருக்கோம். உடன்குடியில ‘கற்பகம் மருத்துவமனை’யை நடத்திட்டு வர்றேன்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண் டவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.<br /><br />Credits<br />Reporter - E.Karthikeyan<br />Video - L.Rajendran<br />Edit : Nirmal<br />Executive Producer - Durai.Nagarajan