#cithiraitv #மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் பூச்சிகள் நிறைந்த தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் :- <br /><br />மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பெரும்பாலான பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே செயல்படும் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ரேஷன் கடையில் 23வது வார்டில் வசிக்கக்கூடிய 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதனிடையே இன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பூச்சிகள் நிறைந்து உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலைமையில் இருந்துள்ளது. இதுகுறித்து ரேஷன் கடையில் இருந்து அதிகாரியிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் உணவிற்கு பயன்படுத்த முடியாது அரிசி வழங்கிய ரேஷன் கடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையை முற்றுகையிட்டு கையில் பூச்சிகள் நிறைந்த தரமற்ற அரிசியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடைகளிலும் இந்த அவலநிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தரமுள்ள அரிசியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்தனர்.
