Surprise Me!

" நெகிழ்ச்சி " மின் மயான ஊழியர்களுக்கு பாராட்டு விழா!

2022-05-04 2 Dailymotion

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய போது மதுரையில் கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதில் கால தாமதமும், டோக்கன் பெற்று உடல்களை தகனம் செய்ய மணிக்கணக்கில் உறவினர்கள் காத்திருக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் 24 மணி நேரமும் உடல்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு, அங்குள்ள 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றினர். முன்களப்பணியாளர்களுக்கு இணையாக கொரானா காலத்தில் பணியாற்றிய மின் மயான பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பகேற்று மின் மயான பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், வெகுமதி வழங்கியும் பாராட்டு தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon