Surprise Me!

"இப்படியெல்லாம் தொல்ல கொடுக்குறாங்க" நடத்துனரிடம் வடிவேலு பாணியில் வம்பிழுத்த பாட்டி!

2022-05-28 9 Dailymotion

கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இதில் 50நம்பர் எண் கொண்ட பேருந்து காந்திபுரம்,உக்கடம், ஆத்துப்பாலம்,மதுக்கரை, பாலத்துறை ஆகிய இடங்களுக்கு செல்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு வயதான பெண்மணி பேருந்தில் ஏறி கொண்டு பச்சாபாளையத்திற்கு பேருந்தை இயக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.நடத்துனர் இந்த வாகனம் பணிமனைக்கு செல்கிறது என பலமுறை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த வயதான பெண்மணி இறங்க மறுத்துள்ளார்.மேலும் அந்தப் பெண்மணி இந்தப் பேருந்து மேற்கு பக்கமாக விட வேண்டும் எனவும் நடத்துனரிடம் இந்த பேருந்து செல்லாது என எழுதிக் கொடு என்று கேட்டுள்ளார் .இதற்கு அந்த நடத்துனர் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் எப்படி நாங்கள் வாகனத்தை ஓட்டுவது என வேதனை தெரிவித்து உள்ளார்.

Buy Now on CodeCanyon