’ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் ’தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியிலிருந்து கசப்போடு விலகுவதாக, அதனை நெறியாள்கை செய்து வந்த இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.<br /><br />இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது! சமூக நீதி , சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. உடன் நின்ற அனைவருக்கும் அன்பும், நன்றியும்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.<br /><br />’சமூக நீதி , சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில்..’ என்று கரு.பழனியப்பன் பதிவு செய்திருப்பதே, அவரது விலகலுக்கான காரணத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறது. பாஜக பின்னணியிலான ஜீ குழுமத்தின் அங்கமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கரு.பழனியப்பன் சந்தித்திருக்கும் கசப்பு எதிர்பார்த்ததே என்று, அவருடைய பதிவை பகிர்வோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.<br /><br />Website: https://kamadenu.hindutamil.in<br />Facebook : https://www.facebook.com/kamadenutamil/<br />Twitter : https://twitter.com/KamadenuTamil<br />Sharechat : https://sharechat.com/KamadenuTamil<br />Instagram : https://www.instagram.com/kamadenutamil/<br />Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/
