யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.<br /><br />இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தையான கந்தசாமி ஏற்றி வைத்தார்.<br /><br />பொதுச்சுடர்கள் அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.<br /><br />மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.