Surprise Me!

அண்ணாமலையார் கோவிலில் அசைவ உணவான பிரியாணி சாப்பிட்ட தம்பதிகளால் பரபரப்பு !

2025-06-10 2 Dailymotion

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் இன்று ராஜகோபுரம் உட்புறத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய இருவர் கோவிலுக்குள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காவல்துறையினரிடம் புகார் சொல்லியதை தொடர்ந்து கோயிலில் உள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கும் இடத்தில் முறையாக பரிசோதனை செய்து அனுப்பியிருந்தால் அசைவ உணவு கோவிலுக்குள் எடுத்துச் செல்வதை தடுத்திருக்கலாம் எனவும் கோவில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரின் மெத்தனப் போக்கையே காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநில பக்தர் ஒருவர் அணிந்திருந்த காலணிகளை கவரில் போட்டு எடுத்துக்கொண்டு கோவில் வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த நிகழ்வு நடந்தேறி உள்ளது தற்போது முட்டை மற்றும் சிக்கன் உணவு கோவிலுக்குள் வந்து எவ்வாறு தைரியமாக சாப்பிடுகிறார்கள் எனவும் கோவிலின் ஆகம விதி இதனால் மீரப்பட்டிருக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.<br /><br />#annamalaiyartemple #eggbiriyani #templevisit #thiruvannamalai #templefestival #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon