Surprise Me!

மாற்றுத்திறனாளி மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

2025-09-06 8 Dailymotion

<p>தஞ்சாவூர்: 2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று (செப் 6) நடைபெற்றது. </p><p>இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாற்றுத்திறனாளி வீரர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பெயர் சொல்லி அழைத்து, அவர்களை உற்சாகமூட்டினார். </p><p>இந்த செயல் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் தடகளம், இறகுப்பந்து, கபடி, அடாப்டட் வாலிபால், எறிபந்து, மற்றும் சக்கர நாற்காலி மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. </p><p>இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். </p><p>நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.</p>

Buy Now on CodeCanyon