Surprise Me!

தீபாவளி கொண்டாட்டம்: ரூ.3 கோடிக்கு ஆடு, மாடு, கோழி விற்பனை! களைகட்டிய வார சந்தை!

2025-10-16 13 Dailymotion

<p>பொள்ளாச்சி: தென்னிந்தியாவில் மிகப் பெரிய கால்நடை சந்தையாக கோவையின் பொள்ளாச்சி கால்நடை சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் இந்த சந்தை நடைபெறுகிறது. பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை மாடுகளுடன், ஆடு விற்பனையும் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றனர்.</p><p>மேலும், பண்டிகை காலங்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக சந்தையில் வர்த்தகம் சுமார் ரூ.2 கோடிக்கு நடைபெற்று வந்தது. </p><p>இந்நிலையில் அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை வருவதையொட்டி இன்று வியாழக்கிழமை சிறப்பு வார சந்தை நடைபெற்றது. அப்போது ஆடு, மாடுகள் விற்பனை களைகட்டியது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழி, ஆடு, மாடு மற்றும் எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. </p><p>அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் வந்திருந்தனர். இன்றைய தினம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>

Buy Now on CodeCanyon