Surprise Me!

கொடைக்கானலில் 'திடீரென' பனி மூட்டம்

2026-01-06 9 Dailymotion

<p>திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று (ஜன 6) ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகர் பகுதிகள் மற்றும் சாலைகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. </p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல், இயற்கை அழகுக்கும் குளுமையான காலநிலைக்கும் பெயர் பெற்றது.  </p><p>இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் காலை நேரங்களில் நீர் பனி நிலவி வந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் இன்று காலையிலிருந்து கடும் குளிர் நிலவி வந்தது, கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொடைக்கானலில் முக்கிய சாலைகளாக உள்ள பேருந்து நிலையம், மூஞ்சிகள், ஏரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவி வந்தது.</p><p>நகர்ப்பகுதிகள் மட்டுமல்லது பிரதான சாலைகளான வத்தலக்குண்டு - கொடைக்கானல் மற்றும் பழனி - கொடைக்கானல் ஆகிய இரண்டு பிரதான சாலைகளிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர். </p>

Buy Now on CodeCanyon