Surprise Me!

சிறுபான்மையின மக்கள் 'நூதன' போராட்டம்

2026-01-08 2 Dailymotion

<p>அரியலூர்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  </p><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.  </p><p>இந்த நிலையில் நீண்ட நாட்களாக மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.  </p><p>அதன்படி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் வந்து குவிந்தனர். அப்போது கோரைப்பாய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தமானர்கள். அப்போது அங்கு வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். </p>

Buy Now on CodeCanyon