Surprise Me!

ஐந்து டன் செங்கரும்பில் உருவான திருத்தேர்: வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

2026-01-15 65 Dailymotion

<p>காஞ்சிபுரம்: 5 டன் செங்கரும்பினால் உருவான தேரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விவசாய குடும்பத்தினர் அசத்தியுள்ளனர்.</p><p>காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்- செல்வி தம்பதியினர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக செந்தில்குமார் குடும்பத்தினர் விவசாயத்தை போற்றும் வகையிலும், இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செங்கரும்பில்லான பிரம்மாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பாரம்பரிய குடிசை குடில், மாட்டு வண்டி, காளை மாடுகள் என ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான வடிவங்களை செங்கருப்பில் உருவாக்கி பொங்கலிட்டு மகிழ்வர். </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக 21 அடி உயரமும், 10 அடி அகலமும், 5 டன் செங்கரும்பினால் ஆன செங்கரும்பு திருத்தேர் உருவாக்கி, அத்தேரின் முன்பு பொங்கல் வைத்து தங்கள் குடும்பத்தினரோடு பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.</p><p>ஐந்து டன் எடை கொண்ட செங்கரும்பினால் உருவாக்கப்பட்ட தேரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தேரை தயாரித்த செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய செங்கரும்பிலான திருத்தேருடன் விவசாய குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடியதை அறிந்து, ஏராளமான கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்று வருகின்றனர்.</p>

Buy Now on CodeCanyon