Surprise Me!

பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் நடனமாடி கொண்டாட்டம்

2026-01-16 16 Dailymotion

<p>விழுப்புரம்: ஆரோவில்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உள்ளூர்வாசிகளுடன் வெளிநாட்டினர் ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டு நடனமாடி கொண்டாடினர்.</p><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சர்வதேச நகரமான ஆரோவிலில் மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், வெளிநாட்டினர் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து கொண்டு பங்கேற்றனர். உள்ளூர் பெண்களுடன் இணைந்து கரும்பு, காய்கறிகள் விநாயகருக்கு படையலிடப்பட்டு, மண் பானையில் பொங்கலிட்டனர். சமைக்கப்பட்ட பொங்கல், பங்கேற்ற வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டது.  </p><p>நிகழ்ச்சியையொட்டி உரியடித்தல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், நாட்டுபுற நடனம் போன்ற தமிழர் பண்பாட்டு அடையாளங்களை விளக்கி நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து இந்த பொங்கல் விழா குறித்து அங்கு வந்திருந்த வெளிநாட்டினர் கூறுகையில், "தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை அறிந்து கொள்ள வந்தோம். பொங்கல் விழா எங்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் படி அமைந்தது. இந்த பொங்கல் விழா குறித்து எங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு எடுத்துரைப்போம்" என்றனர். விழா ஏற்பாடுகளை மோகன கலாசார மைய இயக்குநர் பாலசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.</p>

Buy Now on CodeCanyon