Surprise Me!

மகாநந்திக்கு 2 டன் காய்கறிகள் அலங்காரம்

2026-01-16 20 Dailymotion

<p>தஞ்சாவூர்: உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு 2000 கிலோ எடை கொண்ட காய்கறிகளுடன் நந்தி சிலைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றுது.</p><p>தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலில் மஹாநந்தியெம் பெருமான் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். </p><p>இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு பக்தர்கள் வழங்கிய சுமார் 2000 கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார். </p><p>பின்னர் 108 பசு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடுகளில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தனது குழந்தையுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.</p>

Buy Now on CodeCanyon